படைவெட்டி மாரியம்மன் கோயிலில் மாசி மாத வீதி விழா தொடக்கம்
By DIN | Published On : 12th February 2019 08:54 AM | Last Updated : 12th February 2019 08:54 AM | அ+அ அ- |

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 131-வது மாசி மாத வீதி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திரு நடன வீதியுலா நடைபெறும். இதன்படி, மாசி மாதத்தை முன்னிட்டு, பிப். 4-ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிப். 17-ம் தேதி முதல் பச்சை காளி, பவளக் காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பிப். 20-ம் தேதி வரை கும்பகோணம் நகரப் பகுதியில் வீதியுலா நடைபெறவுள்ளது. 21-ம் தேதி இரவு திருநடனக்காட்சியுடன் கோயிலை அடைகிறது.