அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார்.
சென்னை பிஎப்எஸ்ஐ, டிவிஎஸ் எக்ஸிகியூட்டிவ் சோர்ஸ் டிரைனிங் சர்வீஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்கள் வினோத், ரக்கிம் ராவூத்தர் ஆகியோர் வங்கி அலுவலர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தினர். இதில், இக்கல்லூரியின் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 200 பேர் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல்காதர் செய்திருந்தார்.