தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 15 மின் தடை
By DIN | Published On : 14th June 2019 09:38 AM | Last Updated : 14th June 2019 09:38 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளர் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை சாலை, சிட்கோ, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிபட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.