கடலில் தவறி விழுந்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது
By DIN | Published On : 22nd March 2019 08:36 AM | Last Updated : 22nd March 2019 08:36 AM | அ+அ அ- |

சேதுபாவாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவருடைய கண்ணாடியிழை படகில் அவருடன் சேதுபாவாசத்திரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த பஷீர்முகமது மகன் சேக்முகமது (21), சர்புதீன் மகன் ஹாஜாமுகையதீன் (26)ஆகியோர் திங்கள்கிழமை மாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
சேதுபாவாசத்திரத்திலிருந்து 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வீசிய வலையை சேக்முகமது படகுக்குள் இழுத்தபோது நிலை தடுமாறி தலைகுப்புற கடலுக்குள் விழுந்து விட்டார். உடன் இருந்த மீனவர்கள் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.அவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், 2 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மாலை புதுப்பட்டினம் கடற்கரையோரத்தில் சேக் முகமது உடல் கரை ஒதுங்கியது. சேதுபாவாசத்திரம் போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...