தஞ்சாவூரில் மே 10 முதல் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
By DIN | Published On : 05th May 2019 03:23 AM | Last Updated : 05th May 2019 03:23 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் மே 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறஉள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் ஆர்.ஆர். காளிதாஸ் வாண்டையார் தெரிவித்திருப்பது: தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 14 வயதுக்குள்பட்டோர் அணிக்கான (1.9.2005-க்குப் பிறகு பிறந்தவர்கள்) வீரர்கள் தேர்வு மே 10-ஆம் தேதி காலை 9 மணிக்கும், 16 வயதுக்குள்பட்டோர் அணிக்கான (1.9.2003-க்குப் பிறகு பிறந்தவர்கள்) வீரர்கள் தேர்வு மே 11-ஆம் தேதி காலை 9 மணிக்கும், 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு (1.9.2000-க்குப் பிறகு பிறந்தவர்கள்) 12-ஆம் தேதி காலை 9 மணிக்கும் நடைபெறுகிறது.
எனவே தகுதி உள்ளவர்கள் வெள்ளை சீருடை, உரிய வயது சான்றிதழ் மற்றும் உபகரணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9487304174, 7010324867 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.