ரயிலில் அடிபட்டு விவசாயி சாவு
By DIN | Published On : 15th May 2019 08:44 AM | Last Updated : 15th May 2019 08:44 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் நடந்து சென்ற விவசாயி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி கீழத்தெருவைச் சேர்ந்தவர் எம். ராமன் (40). விவசாயி. இவர் திங்கள்கிழமை இரவு சுவாமிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் இவர் அடிபட்டார். இதில், பலத்தக் காயமடைந்த ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். ராமனுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.