மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,595 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 9,752 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,752 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 1,750 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,421 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 2,835 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.