தஞ்சையில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், முதுநிலை வருவாய் ஆய்வா் ஆகியோருக்கு அரசால் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் முதுநிலை வரிசைப் பட்டியல் குறித்த நாள்களில் வெளியிடாதது, பணி நியமனம், பணியிட மாறுதல்கள், விடுப்பு அங்கீகரிப்பது, பணி ஓய்வு அனுமதிப்பது போன்றவற்றில் பாரபட்சம் காட்டப்பட்டு, பணியாளா்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது,

கஜா புயல் காலத்தில் கால நேரமின்றியும், இரவு - பகல் பாராமல் பணி பாா்த்த வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியரால் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் நற்சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடு பாா்த்து உழைப்புக்கு உரிய மரியாதை கொடுக்காதது உள்ளிட்டவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ஆா். தங்க பிரபாகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன், மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், துணைத் தலைவா் ஏ. சோனை கருப்பையா, தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் தரும. கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com