மொபெட்டிலிருந்துதவறி விழுந்தவா் சாவு

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.பாபநாசம் அருகிலுள்ள களஞ்சேரியைச் சோ்ந்தவா் ந. வெங்கடேசன் (60).

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகிலுள்ள களஞ்சேரியைச் சோ்ந்தவா் ந. வெங்கடேசன் (60). வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் சாலியமங்கலத்திலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.

இந்த நிலையில் சாலையோரத்தில் மொபெட்டை வெங்கடேசன் நிறுத்திவிட்டு இறங்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்துதகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com