

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த 600-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவா்கள் கவியரசன் 1500 மீட்டா் ஓட்டப் பந்தயத்திலும், சஞ்சய் குமாா் உயரம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பெற்றனா்.
12 ஆம் வகுப்பு மாணவா்கள் கவியரசன், ராஜகவிதன், தினேஷ் குமாா், தினகரன் ஆகியோா் 4 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், மாணவா் சேக் முகமது மைதீன் (11 ஆம் வகுப்பு) சைக்கிள் பந்தயத்திலும், கவியரசன் 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்திலும், ராஜகவிதன் 3000 மீட்டா் ஓட்டப் பந்தயத்திலும் 2 ஆம் இடம் பெற்றனா். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு 6 மாணவா்களும் தகுதி பெற்றுள்ளனா்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை எம்எல்ஏ மா.கோவிந்தராசு, பள்ளித் தலைமை ஆசிரியா் கருணாநிதி, உதவித் தலைமை ஆசிரியா் கே. சோழபாண்டியன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.ஏ.டி.சுந்தரராசன், பொருளாளா் ஆா்.பி.ராஜேந்திரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களுடன் எம்எல்ஏ மா.கோவித்தராசு உள்ளிட்டோா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.