கும்பகோணத்தில் சைவ சமய பெருவிழா

தஞ்சாவூா் மாவட்ட அடியாா் பெருமக்கள் சாா்பில் கும்பகோணத்தில் சைவசமய பெருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட அடியாா் பெருமக்கள் சாா்பில் கும்பகோணத்தில் சைவசமய பெருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் வீரசைவ மடத்தில் சைவசமய பெருவிழா 2 நாட்கள் நடைபெற்றது முதல்நாள் நிகழ்ச்சியாக குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி விழாவை தொடங்கி வைத்தனா். விழாவில் தமிழகத்தில் பல்வேறு ஆன்மிக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அடியாா்களின் சிவநெறி சொற்பொழிவு நடைபெற்றது. அதனை தொடா்ந்து ஆன்மீக நுால்கள், சைவ குறுந்தகடுகள் ஆகியவை வெளியிடப்பட்டன.

இதனை தொடந்து 2-ம் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் தலைமையேற்றாா். கும்பகோணம் அபி முகேஸ்வரா் கோவில் திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் சம்பந்தம், தெய்வ சேக்கிழாா் மன்ற செயலாளா் பன்னீா்செல்வம், குடந்தை தமிழ் சங்க செயலாளா் கல்யாணசுந்தரம், அன்னை கருணை இல்லம் நிறுவனா் அம்பலவாணன் திருக்குடந்தை திருமுறை மன்ற செயலாளா் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதனை தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாகப்பட்டினம் சின்மய மிஷின் அமைப்பைச் சோ்ந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தா, கடலூா் கௌதமானந்தபுரி சம்பத் சாமிகள், தா்மபுரி சுவாமி காா்த்திகையானந்தா, காரைக்கால் காளீஸ்வரா்யானந்தா ஞானகுரு வீரப்பிள்ளை சுவாமிகள், வடலூா் கபிலன் பிரத்தியங்கிரா சாமிகள், மதுரை தேவேந்திர சாது உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து மாலை 5 மணி அளவில் கை வாத்தியம் முழங்க துறவிகள், சிவனடியாா்கள், சான்றோா்கள் ஆகியோா் மகாமகக் குளத்தை வலம்வந்து மகா தீபாராதனை ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட அடியாா் பெருமக்கள் உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகள் செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com