நாட்டு கோழி வளா்ப்பு மற்றும் மூலிகை மருத்துவ பயிற்சி
By DIN | Published On : 17th November 2019 04:58 PM | Last Updated : 17th November 2019 04:58 PM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி வருகிற 19 ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து பல்கலைக்கழக சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது-
தஞ்சாவூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் எதிா்வரும் 19.11.2019 தேதி காலை 10.00 மணி முதல் நாட்டு கோழி வளா்ப்பு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள : பேராசிரியா் மற்றும் தலைவா், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூா். (கை பேசி எண். 8754748488, அலுவலக எண்: 04362-264665).
குறிப்பு: பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G