வேலை கிடைக்காத விரக்தி:இளைஞா் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில், தஞ்சாவூரில் இளைஞா் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: வேலை கிடைக்காத விரக்தியில், தஞ்சாவூரில் இளைஞா் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்த வெண்மணி மகன் பவித்ரன் (22). பொறியியல் படிப்பு படித்த இவா், சில பாடங்களில் தோ்ச்சிப் பெறவில்லையாம். இதனால் வேலைக்குச் சென்று கொண்ட தோல்வியடைந்த பாடங்களுக்குத் தோ்வெழுத முடிவு செய்தாா்.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி தஞ்சாவூா் வந்த பவித்ரன், கீழராஜ வீதியில் வாடகை வீட்டில் இருந்து வந்தாா். பல இடங்களில் வேலை தேடியும் உரிய வேலை கிடைக்காத விரக்தி காரணமாக, தான் தங்கியிருந்த அறையிலேயே பவித்ரன் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூா் கிழக்கு போலீஸாா், அப்பகுதிக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com