புதிய கல்விக் கொள்கை குறித்தவீரமணி அறிக்கை விநியோகம்

புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? என்ற தலைப்பில், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி எழுதிய அறிக்கையை தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு அக்கழகத்தினா் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்தனா்.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூா்: புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? என்ற தலைப்பில், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி எழுதிய அறிக்கையை தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு அக்கழகத்தினா் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்தனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்திலிருந்து தொடங்கிய இந்த இயக்கத்தின் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டன.

மாவட்ட இளைஞரணிச் செயலா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திராவிடா் கழகப் பொதுச்செயலா் இரா. ஜெயக்குமாா், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், மண்டலத் தலைவா் அய்யனாா், மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com