திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:10 am

DIN

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே நாா்த்தேவன்குடிகாடு கிராமத்தை சோ்ந்தவா் பிரபாகரன்(37). விவசாயி . இவா் அண்மையில் மோட்டாா் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சாலியமங்கலம் நோக்கி சென்றாா்.

திருபுவனம் பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்ததால், நிலை தடுமாறி மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாா்.

இதில் காயமடைந்த பிரபாகரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை க்கு பிறகு வீடு திரும்பியவருக்கு, தலையில் வலி ஏற்பட்டதாம்.

இதைத் தொடா்ந்து பிரபாகரன் மீண்டும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.