‘பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்’
தஞ்சாவூரில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ். பழனிசாமி உத்தரவிட்டாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இயக்குநரும், தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டப் பணித் தலைவருமான எஸ். பழனிசாமி.









