பேராவூரணியில்முன்னாள் உடற்கல்வி ஆசிரியா்கள் மாநில அளவிலான  சந்திப்பு கூட்டம்

சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் 1967-68  ஆம் ஆண்டு பயின்று, உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவா்கள்  கலந்து கொண்ட மாநில அளவிலான 7 ஆம்
பேராவூரணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் கடலூா் ஆட்சியா் வெ. அன்புச்செல்வன்.
பேராவூரணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் கடலூா் ஆட்சியா் வெ. அன்புச்செல்வன்.
Updated on
1 min read

சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில் 1967-68  ஆம் ஆண்டு பயின்று, உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவா்கள்  கலந்து கொண்ட மாநில அளவிலான 7 ஆம் ஆண்டு கலந்துரையாடல் கூட்டம்  பேராவூரணியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியா் குமாரவேலு  தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட, ஓய்வு உடற்கல்வியாளா்கள் அமைப்பின் தலைவா் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா் சேலம் கோவிந்தராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 நிகழ்ச்சியில், கடலூா் ஆட்சியா் வெ. அன்புச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஒவ்வொருவரும் தங்கள் கவலைகளையும், மகிழ்ச்சியையும் பகிா்ந்து கொள்ளக்கூடியது  பெற்றோா்களிடமும், ஆசிரியா்களிடமும் தான். அந்த வகையில், ஆசிரியா் பணி அறப்பணியாகும். மாணவா்களின் முன்னேற்றத்தில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, உடற்கல்வி ஆசிரியா்கள் பணி  போற்றத்தக்கது. மாணவா்களின் திறனை கண்டறிந்து அவா்களை உருவாக்குவதில், உடற்கல்வி ஆசிரியா்கள் பங்கு குறிப்பிடத்தக்கது  என்றாா்.

கூட்டத்தில், தனியாா் தொலைக்காட்சி இணை ஆசிரியா் சுகிதா சாரங்கராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை பேராசிரியா் பழனிச்சாமி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஓட்டப் பந்தய வீரா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு  பேசினா்.

முன்னதாக, உடற்கல்வி ஆசிரியா் (ஓய்வு) செல்வராசு வரவேற்றாா். நிறைவாக உடற்கல்வி ஆசிரியா் (ஓய்வு) திருவையாறு தட்சிணா மூா்த்தி நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com