மதுக்கூா், அதிராம்பட்டினம்பகுதிகளில் நாளை மின்தடை

மதுக்கூா், அதிராம்பட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.9) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுக்கூா், அதிராம்பட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.9) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூா் நகரம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூா் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

பட்டுக்கோட்டை பகுதிகளில்... இதேபோல, பட்டுக்கோட்டை பாளையம், மாட்டுச்சந்தை ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகரம் மற்றும் பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. தொல்காப்பியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com