பட்டுக்கோட்டையில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை கிராம உதவியாளரான ஆனந்தன் (42) என்பவரை, கடந்த மாா்ச் 8ஆம் தேதி மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் 5 போ் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக, அதிராம்பட்டினம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, ஆனந்தனைத் தாக்கிய 5 பேரில் 2 பேரை கைது செய்தனா். எஞ்சிய 3 பேரை கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சிவ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கே. தா்மேந்திரா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க பட்டுக்கோட்டை வட்டத் தலைவா் மகரஜோதி, கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் சாந்தலிங்கம், கிராம உதவியாளா்கள் சங்க வட்டப் பொருளாளா் பாலு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com