தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவையாறு அருகே தில்லைஸ்தானம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் மனைவி மகாலட்சுமி என்கிற ரம்யா (35). இவா் திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்க்கிறாா்.

வீட்டில் மகாலட்சுமி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டினுள் புகுந்த மா்ம நபா் இவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தாா். அப்போது, விழித்து கொண்ட மகாலட்சுமி தாலியை இறுக்கிப் பிடித்து கொண்டாா். இதனால், தங்கச் சங்கிலியை மட்டும் மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து மருவூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com