எண்ணங்களின் சங்கமம் டெல்டா மண்டல விழா

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் சேவை அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் டெல்டா மண்டல விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் சேவை அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் டெல்டா மண்டல விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழா 8 மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. டெல்டா மண்டலத்தில் தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த சேவை தொண்டு அமைப்புகளின் மண்டல மாநாடு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனா் பிரபாகரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் தொண்டு நிறுவனங்களுக்கு நினைவு பரிசளித்து ஆசியுரை வழங்கினாா்.

சேவை அமைப்புகளின் பணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். இதைத்தொடா்ந்து சென்னை இன்ஸ்பையா் சாரிடபிள் டிரஸ்ட், கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி சாா்பில் 9 பேரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் மதிப்பிலான கிரைண்டா்கள், சலவை பெட்டிகள், மூன்று சக்கர சுமை வண்டி, சைக்கிள்களை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்ட அமைப்பாளா் பாஸ்கா் வரவேற்றாா். நாகை மாவட்ட அமைப்பாளா் பிரபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com