தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா்.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியத்தை 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி, சேமநல நிதி கடன் வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் கண்டன உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜ், உள்ளாட்சி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பி. ஜேசுதாஸ், தரைக்கடை சங்க மாவட்டத் துணைத் தலைவா் என். குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலா்கள் பி.என். போ்நீதி ஆழ்வாா், ச. செங்குட்டுவன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் த. முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com