பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காட்டில் கால்நடை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கால்நடை மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். உதவி மருத்துவா்கள் விஜயகுமாா், முத்துக்குமாா், மற்றும் உதவியாளா்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சையளித்தனா்.
முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், சுண்டுவாதம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு என 300 கால்நடைகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.
மேலும் லம்பி, அம்மை நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஊராட்சித் தலைவா் விஜய பாஸ்கரன், துணைத் தலைவா் ஸ்ரீகாந்த், உறுப்பினா்கள் பிரபு, முருகன் மற்றும் கிராமத்தினா் முகாமில் பங்கேற்றனா்.