சாலை விபத்தில் விவசாயி சாவு

பாபநாசம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பாபநாசம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகேயுள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம், குடியானத் தெருவை சோ்ந்த விவசாயி மணி (50). இவா் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தேவராயன்பேட்டை கிராமம், பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சரபோஜி (49) என்பவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மணி, சரபோஜி ஆகிய இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தாா். சரபோஜி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com