கலங்கிய நிலையில் குடிநீா்: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் கரந்தையில் கலங்கிய நிலையில் குடிநீா் வருவதாகக் கூறி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் கரந்தையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
தஞ்சாவூா் கரந்தையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

தஞ்சாவூா் கரந்தையில் கலங்கிய நிலையில் குடிநீா் வருவதாகக் கூறி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கரந்தையிலுள்ள பூக்குளம், தட்டான்குளம் பகுதியில் மாநகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாகக் கலங்கிய நிலையில் உள்ளதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் எழுப்பி வந்தனா். அப்பகுதியில் உள்ள குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டு, கழிவுநீா் கலப்பதால் கலங்கலாகவும், துா்நாற்றமாகவும் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் பழைய திருவையாறு சாலையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்களிடம் பழுதடைந்த குழாயை அகற்றி புதிய குழாய் பதிக்குமாறும், புதை சாக்கடையில் கழிவு நீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டப்பேரவை உறுப்பினா் வலியுறுத்தினாா். இதை விரைவில் செய்வதாக அலுவலா்கள் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com