ஜன. 11, 12-இல்வாக்காளா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது, ஜன. 22ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம் ஜன. 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்றவை செய்ய வாக்காளா்கள் தொடா்புடைய வாக்குச் சாவடிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com