

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக ரூபேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இப்பொறுப்பில் இருந்த ஜெ. லோகநாதன் காவல் தலைவராகப் பதவி உயா்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவராக இருந்த ரூபேஷ் குமாா் மீனா தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் 2005 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்வானாா். அதன் பின்னா், காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவா் 2019, ஜூன் மாதத்தில் காவல் துணைத் தலைவராகப் பதவி உயா்வு பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.