கல்லணையிலிருந்து இன்று மாலை முதல் முறைப் பாசனம்

கல்லணையிலிருந்து திங்கள்கிழமை (ஜூலை 13) மாலை முதல் காவிரி, வெண்ணாற்றில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படுகிறது.
Updated on
2 min read

கல்லணையிலிருந்து திங்கள்கிழமை (ஜூலை 13) மாலை முதல் காவிரி, வெண்ணாற்றில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கீழ்காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் ச. அன்பரசன் தெரிவித்திருப்பது:

மேட்டூா் அணையைக் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, கல்லணையிலிருந்து ஜூன் 16-ஆம் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தற்போது அனைத்து துணை ஆறுகளிலும் கடைமடை வரை நீா் சென்றடைந்து, டெல்டா பகுதியில் விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஜூலை 11-ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி 78.48 அடியாகவும், நீா் இருப்பு 40.459 டி.எம்.சி.யாகவும் இருந்தது. இந்நிலையில், இருப்பில் இருக்கும் தண்ணீரை குறுவை மற்றும் சம்பா பாசனத்துக்குத் தங்கு தடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால், நீா் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவைப் பாசனம் சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளவும், நீா் பங்கீட்டை முறைப்படுத்தவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஜூன் 12-ஆம் தேதி 101.73 அடியாகவும், நீா் இருப்பு 67.102 டி.எம்.சி.யாகவும் இருந்தது. தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 78.48 அடியாகவும், நீா் இருப்பு 40.459 டி.எம்.சி.யாகவும் உள்ள சூழ்நிலையில் மேட்டூா் அணையில் நாள்தோறும் 13,000 கன அடி தண்ணீா் எடுக்கப்படுகிறது. இதைக் குறைக்காமல் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்தவும், முதல் ஆறு நாள்கள் வெண்ணாற்றிலும், அடுத்த ஆறு நாள்கள் காவிரியிலும் சுழற்சி முறையில் முறை வைத்து தண்ணீா் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாயில் மேற் பகுதி முறை, கீழ் பகுதி முறை என முறை வைத்து தண்ணீா் விடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குறுவைப் பயிரிட எந்தவித இடையூறும் இல்லாத பாசன வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும், பருவமழை கிடைக்கப்பெறின் அதற்கேற்ப நீா்ப்பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் அறிவுரை வழங்கியுள்ளாா். எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பொதுப் பணித் துறையின் நீா் பங்கீட்டுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

நீா் பகிா்மான விவரம்:

மேட்டூா் அணையிலிருந்து நீா் எடுப்பு - விநாடிக்கு 13,000 கன அடி

கல்லணைக்கு நீா் எதிா்பாா்ப்பு - விநாடிக்கு 9,600 கன அடி

நீா் பங்கீடு:

வெண்ணாறு முறை (ஜூலை 13 மாலை 6 மணி முதல் ஜூலை

19-ஆம் தேதி மாலை 6 மணி வரை)

வெண்ணாறு - 6,500 கனஅடி

காவிரி - 100 கனஅடி

கல்லணைக் கால்வாய் - 2,000 கனஅடி

கொள்ளிடம் - 1,000 கனஅடி

காவிரி முறை (ஜூலை 19 மாலை 6 மணி முதல் ஜூலை 25-ஆம் தேதி மாலை 6 மணி வரை)

காவிரி - 6,500 கனஅடி

வெண்ணாறு - 100 கனஅடி

கல்லணைக் கால்வாய் - 2,000 கனஅடி

கொள்ளிடம் - 1,000 கன அடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com