அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டையில் தொடரும் போராட்டம்
By DIN | Published On : 01st March 2020 06:24 AM | Last Updated : 01st March 2020 06:24 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 11-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஜாவியா சாலையிலுள்ள தொடா் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது. அங்கு வழக்குரைஞா் ஏ.முனாப் கண்டன உரையாற்றினாா்.
பட்டுக்கோட்டையில்...
இதேபோல, பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 5-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.