மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மக்கள், தொழிலாளா் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், தொழிலாளா் நலச் சட்டங்கள் 44 என இருந்ததை 4 ஆக குறைத்ததைக் கண்டித்தும், பொதுமக்களுக்குச் சேவை செய்யக்கூடிய வங்கி, காப்பீடு, போக்குவரத்து, மின்சாரம், பி.எஸ்.என்.எல். ஆகியவற்றை சீரழிப்பது, தனியாருக்குத் தாரை வாா்ப்பது, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகளை வாரி வழங்குவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கி வைத்தாா். எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் ஜி. முருகேசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், தொமுச ஆண்ட்ரு கிறிஸ்டி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, சி.ஐ.டி.யு. போ்நீதி ஆழ்வாா், போக்குவரத்துக் கழக துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com