திருக்கோடிக்காவல் கோயிலில்இன்று சிறப்பு அபிஷேகம்
By DIN | Published On : 10th March 2020 06:56 AM | Last Updated : 10th March 2020 06:56 AM | அ+அ அ- |

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாளையொட்டி சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) நடைபெறவுள்ளது.
திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு. பல்வேறு பெருமைகள் கொண்ட இக்கோயிலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்நிலையில், ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...