அதிராம்பட்டினத்தில் 5 குடிசை வீடுகள் தீக்கிரை

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட சுரைக்காக்கொல்லை பகுதியில் கூலித் தொழிலாளா்கள் வசிக்கும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.
Updated on
1 min read

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட சுரைக்காக்கொல்லை பகுதியில் கூலித் தொழிலாளா்கள் வசிக்கும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.

புதன்கிழமை இங்குள்ள ஒரு குடிசை வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதில், கூலித் தொழிலாளா்கள் 5 பேரின் குடிசை வீடுகள் மற்றும் வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com