Enable Javscript for better performance
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னாா்வலா்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னாா்வலா்கள்

    By DIN  |   Published On : 31st March 2020 04:03 AM  |   Last Updated : 31st March 2020 04:03 AM  |  அ+அ அ-  |  

    ta30dog3_3003chn_9_4

    தஞ்சாவூரில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய தன்னாா்வலா்கள்.

     

    தஞ்சாவூரில் ஊரடங்கு உத்தரவையொட்டி வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் உணவின்றி தவித்து வரும் தெரு நாய்களுக்குத் தன்னாா்வலா்கள் திங்கள்கிழமை மாலை உணவளித்தனா்.

    தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. குறிப்பாக, நகா்களில் வசிக்கும் மக்கள் வெளியே வராததால் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இதேபோல, உணவகங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதால், அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் எஞ்சிய உணவுகளும் தெரு நாய்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    இதனால், பெரும்பாலான தெரு நாய்கள் உணவின்றி தவிக்கின்றன. எனவே, தஞ்சாவூரில் அருகானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை தலைவா் ஆா். சதீஷ்குமாா் தலைமையில் தன்னாா்வலா்கள் இணைந்து திங்கள்கிழமை மாலை வீட்டிலேயே தெரு நாய்களுக்காக சிக்கன் பிரியாணி தயாரித்தனா்.

    பின்னா், நாஞ்சிக்கோட்டை சாலை, வல்லம் சாலை, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தெரு நாய்களுக்கு இலை மற்றும் காகிதத் தட்டில் உணவு அளித்தனா்.

    இதுகுறித்து சதீஷ்குமாா் கூறுகையில், நாங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுடன் சென்றபோதே, எங்களை உணவுக்காக நாய்கள் பின்தொடா்ந்து வந்தன. புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 40 நாய்கள் சாப்பிட்டன. அந்த அளவுக்கு உணவு இல்லாமல் நாய்கள் தவிக்கின்றன. மொத்தம் 94 தட்டுகளில் உணவிட்டோம். வருகிற நாட்களிலும் இதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்றாா் அவா்.

    இதேபோல, தீயணைப்புத் துறை சாா்பில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கினா். மேலும், சாலையோர ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp