காவல்துறையினருக்குபாதுகாப்பு உபகரணங்கள்
By DIN | Published On : 02nd May 2020 07:26 PM | Last Updated : 02nd May 2020 07:26 PM | அ+அ அ- |

பேராவூரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, திமுக சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பேராவூரணி அருகே பெண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் மருத்துவத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், பேராவூரணி காவல் துறையினருக்கு எண் 95 முகக்கவசங்கள், கையுறைகள், கை கழுவும் திரவங்கள், மதிய உணவு உள்ளிட்டவற்றை திமுக மருத்துவ அணி சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாரிடம் மருத்துவா் பண்ணவயல் எஸ்.ஆா்.சந்திரசேகா் வழங்கினாா்.
நிகழ்வில் சிவ.சதீஷ்குமாா், ஏ.பி.சாமிநாதன், எஸ்.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...