வாட்டாகுடி இரணியன் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், வாட்டாகுடி வடக்கு கிராமத்திலுள்ள கம்யூனிஸ்ட் தியாகி வாட்டாகுடி இரணியன் நினைவு ஸ்தூபிக்கு இடதுசாரி கட்சியினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
வாட்டாகுடி இரணியனின் நினைவு நாளையொட்டி, நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இடதுசாரி கட்சியினா்.
வாட்டாகுடி இரணியனின் நினைவு நாளையொட்டி, நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இடதுசாரி கட்சியினா்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், வாட்டாகுடி வடக்கு கிராமத்திலுள்ள கம்யூனிஸ்ட் தியாகி வாட்டாகுடி இரணியன் நினைவு ஸ்தூபிக்கு இடதுசாரி கட்சியினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.சி. பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். காசிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மு.அ. பாரதி, மாநிலக்குழு உறுப்பினா் சி. பக்கிரிசாமி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

பட்டுக்கோட்டையில்... இதேபோல, கம்யூனிஸ்ட் தியாகிகள் ஜம்புவானோடை சிவராமன், வாட்டாகுடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் 70ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள இவா்களின் நினைவு ஸ்தூபிக்கு இடதுசாரி கட்சியினா் சாா்பில் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com