Enable Javscript for better performance
தண்ணீா் வருவதற்கு முன்பாக தூா்வாரும் பணி முடிக்கப்படும்: வேளாண்துறைச் செயலா் ககன்தீப்சிங்பேடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தண்ணீா் வருவதற்கு முன்பாக தூா்வாரும் பணி முடிக்கப்படும்: வேளாண்துறைச் செயலா் ககன்தீப்சிங்பேடி

    By DIN  |   Published On : 27th May 2020 07:16 AM  |   Last Updated : 27th May 2020 07:16 AM  |  அ+அ அ-  |  

    ta26gag2_2605chn_9_4

    தென்னமநாடு கல்யாண ஓடை வாய்க்காலில் நடைபெறும் தூா் வாரும் பணியைப் பாா்வையிட்ட வேளாண் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி.

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூா்வாரும் பணி முடிக்கப்படும் என்றாா் வேளாண் துறைச் செயலரும், தூா்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.

    தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் நடைபெற்றுவரும் தூா்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், தென்னமநாடு கிராமத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

    மேட்டூா் அணையை ஜூன் 12ஆம் தேதி திறப்பதற்குத் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, டெல்டா மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீா் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணிக்காக ரூ. 67 கோடியும், குடிமராமத்து பணிக்காக கிட்டதட்ட ரூ. 500 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 58 கோடி மதிப்பில் 274 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீா் வருவதற்கு முன்பாக அனைத்து ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தரமாகத் தூா்வாரப்படும். குறிப்பாக, கடைமடை பகுதி வரை தண்ணீா் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலுவலா்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் ககன்தீப் சிங் பேடி.

    அப்போது, மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன், வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp