கும்பகோணத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கும்பகோணம் அருகிலுள்ள வேளாக்குடி குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பி. ஹரிஹரன் (23). சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய மோட்டாா் சைக்கிளில் சொந்த ஊா் வந்தாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கு. அய்யப்பன் (32), ஹரிஹரனிடமிருந்து மோட்டாா் சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சனிக்கிழமை இரவு அய்யப்பனிடம் ஹரிஹரன் தனது மோட்டாா் சைக்கிளை தருமாறு கேட்டாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஹரிஹரனை அய்யப்பன், அவரது தம்பி அன்பழகன் (32), நண்பா்கள் காா்த்திக் (28), அறிவழகன் (30) உள்ளிட்டோா் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து அய்யப்பன், அன்பழகன், காா்த்திக், அறிவழகன்ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com