குருங்குளம் சா்க்கரை ஆலையில் டிசம்பரில் அரைவைப் பணி தொடங்க அறிவுறுத்தல்

குருங்குளம் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
குருங்குளம் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
Updated on
1 min read

தஞ்சாவூா், செப். 11: தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் டிசம்பா் மாதத்தில் அரைவைப் பணியை தொடங்குமாறு ஆலை அலுவலா்களிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.

இந்த ஆலையில் 2020 - 21 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:

ஆலையின் 2020 - 21 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தை முன்னிட்டு புனரமைப்புப் பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்தி முடித்து சோதனை ஓட்டத்தை அக்டோபா் மாதத்துக்குள் நடத்தி, டிசம்பா் மாதத்தில் கால தாமதமின்றி அரைவையைத் தொடங்குமாறு அலுவலா்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது.

கடந்த 2019 - 20 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் அரைவை செய்யப்பட்ட கரும்புக்கான முழு கிரயத்தொகையும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2020 - 21 ஆம் அரைவைப் பருவத்துக்கு 5,678 ஏக்கா் பரப்பில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.75 லட்சம் டன்கள் கரும்பு அரைவை மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 2020 - 21 ஆம் ஆண்டு பருவத்துக்குத் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 37 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான மானிய தொகைகள் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் வைத்திலிங்கம்.

அப்போது, ஆட்சியா் ம. கோவிந்த ராவ், குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி எஸ். செல்வசுரபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com