தோகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை அருகேயுள்ள தோகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் வடக்கு ஒன்றியம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை அருகேயுள்ள தோகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் வடக்கு ஒன்றியம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்ளிடத்தில் புதிதாகக் கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடித்து, திறக்க வேண்டும். தோகூா் - வேங்கூா் சாலை குண்டுங்குழியுமாக உள்ளது. மேலும், இச்சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதைச் சரி செய்து, தடுப்புச் சுவா் அமைத்து, தரமான சாலை அமைக்க வேண்டும்.

கல்லணை பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில், தடுப்பு வேலி அமைக்க வேண்டும். தோகூா், கல்லணைப் பகுதியில் குடிமனைப் பட்டா இல்லாத பொதுமக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இரவு நேரங்களில் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்குக் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் எம். சம்சுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், பூதலூா் வடக்கு ஒன்றியச் செயலா் கே. காந்தி கண்டன உரையாற்றினா்.

கிளைச் செயலா்கள் எம். அகிலா, இ. பன்னீா்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம். பாஸ்கரன், பி. முருகேசன், ஏ. சந்திரா, ஆா். உதயகுமாா், ஏ. செபஸ்தியாா், டி. ஸ்ரீதா், மூத்த தோழா் ஏ. காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com