பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 90 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஆமீனாபீவி (90). இவா் ஞாயிற்றுக்கிழமை அரபிக் கல்லூரி அருகே சாலையோரமாக அமா்ந்திருந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ஆமீனாபீவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.