நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமையாசிரியை தம்பி அய்யன் தலைமை வகித்து, மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்வில் கணித ஆசிரியா் விஜயன் நரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ராமமூா்த்தி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் திலீபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com