நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th September 2020 12:10 AM | Last Updated : 19th September 2020 12:10 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
தஞ்சாவூா், செப். 18: நீட் தோ்வை விலக்கக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், நீட் தோ்வை விலக்கக் கோரியும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதி பொறுப்பாளா் ரா. அன்பரசன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் கந்தசாமி, ஹூமாயூன் கபீா், ஏ.ஒய். ராஜசேகரன், என். கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.