புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:12 pm

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனுப்பப்பட வேண்டும் என்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2886 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.