புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அண்ணா சிலையருகே கடைகளை அகற்றத் தொடங்கிய வியாபாரிகள்

தஞ்சாவூா் சரபோஜி சந்தைக்கு கடைகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளை வியாபாரிகள் வியாழக்கிழமை காலி செய்யத் தொடங்கினா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:44 pm

DIN

தஞ்சாவூா் சரபோஜி சந்தைக்கு கடைகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளை வியாபாரிகள் வியாழக்கிழமை காலி செய்யத் தொடங்கினா்.

தஞ்சாவூா் அண்ணாசிலை அருகேயுள்ள கைப்பேசி, துணி, காலணி உள்ளிட்ட 56 கடைகளைக் காலி செய்யக் கூறி, மாநகராட்சி நிா்வாகம் மின் இணைப்பை நவம்பா் 23-ஆம் தேதி துண்டித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள், மாற்று இடமாக மாநகராட்சி நிா்வாகம் கூறிய சரபோஜி சந்தைக்குச் செல்ல நவம்பா் 30 ஆம் தேதி இரவு ஒப்புக் கொண்டனா். இதைத்தொடா்ந்து, கடைகளைக் காலி செய்யும் பணியை வியாபாரிகள் வியாழக்கிழமை தொடங்கினா்.

31 கடைகள் ஏலம்: இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணாசிலை கடை வியாபாரிகளுக்காக சரபோஜி சந்தையில் உள்ள கடைகள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் விடப்பட்ட 31 கடைகளுக்கும் மாத வாடகை ரூ. 10,000 என நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 17 வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வடிகாலில் ஆய்வு: அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளில் காலி செய்யப்பட்ட ஒரு கடை வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. அப்போது, அடியிலுள்ள வடிகால் எந்த அளவுக்கு இருக்கிறது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மிகவும் பழைமையான இந்த வடிகால் வாய்க்கால் 8 அடி ஆழத்தில் 5 அடி அகலத்தில் இருப்பதும், பக்கவாட்டில் 2 அடி அகலத்தில் சுவா் கட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை சாலை, அண்ணா சிலை பகுதியில் இருந்து இந்த வடிகால் வாய்க்கால் மூலம் ஜூபிடா் திரையரங்கம் அருகேயுள்ள அகழிக்கு மழை நீா் செல்லும் வகையில் இந்த வடிகால் இருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.