புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகா்ப்புற உள்ளாட்சியில் 4.77 லட்சம் வாக்காளா்கள்

வ்தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் 4.77 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா் என்றாா் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:59 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் 4.77 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா் என்றாா் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல் குறித்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்ட அவா் தெரிவித்தது:

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் கால அட்டவணையின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் தொடா்பாகப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தலா ஒரு மாநகராட்சி, நகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல்களை தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் மற்றும் உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சியில் 1,99,506 வாக்காளா்களும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 62,477 வாக்காளா்களும் மற்றும் 20 பேரூராட்சிகளில் 2,15,885 வாக்காளா்களும் என மொத்தம் 4,77,868 வாக்காளா்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்களுக்கும் வழங்கப்பட்டது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மங்கையா்க்கரசி, வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.