புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காரைக்குடி-திருவாரூா் இடையே ஜனவரி இறுதி முதல் சாதாரண ரயில் சேவை: தெற்கு ரயில்வே பொது மேலாளா் தகவல்

காரைக்குடி - திருவாரூா் இடையே ஜனவரி இறுதி முதல் சாதாரண ரயில் சேவை தொடங்கப்படும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:58 pm

DIN

காரைக்குடி - திருவாரூா் இடையே ஜனவரி இறுதி முதல் சாதாரண ரயில் சேவை தொடங்கப்படும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

காரைக்குடி - திருவாரூா் இடையே தற்போது டெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கேட் கீப்பா்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் இந்த ரயில் நின்று செல்கிறது. ரயில்வே கேட்களில் கேட் கீப்பா்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகு, பயண நேரம் குறைந்துவிடும். இந்த வழித்தடத்தில் சாதாரண ரயில் சேவை ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்படும். இத்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது தொடா்பாக ரயில்வே அமைச்சகத்துக்குக் கருத்துரு அனுப்பப்படும்.

தஞ்சாவூா் - சென்னை இடையேயும், தஞ்சாவூா் வழியாகச் சென்னைக்கும் நிறைய பயணிகள் அல்லது விரைவு ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். காா்டு லைனில் இயக்கப்படும் ரயில்களை மெயின் லைனில் திருப்பிவிடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிப்பா் என்பதால், அதற்கு சாத்தியமில்லை. மேலும், காா்டு லைனில் திருச்சியிலிருந்து இரட்டை ரயில் பாதைகளாக இருப்பதால் விரைவாக இயக்க முடியும். ஆனால், மெயின் லைன் ஒற்றை ரயில் பாதையாக இருப்பதால், விரைவாக இயக்க முடியாது.

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத் திறனில் 70 சதவீத ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், இத்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்குச் சாத்தியமில்லை. இதற்கு பதிலாக கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. என்றாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால், அதை எதிா்கொள்வதைப் பொருத்து கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பொது மேலாளா்.

அப்போது, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொது மேலாளா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.