பட்டுக்கோட்டையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் சிஐடியு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் சிஐடியு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய விரோதச் சட்டங்களையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வேண்டும். தனியாா் மயக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் என். சக்திவேல் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி, அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எம். செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com