பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்

பேராவூரணி அருகேயுள்ள காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :23 ஜூலை 2021, 7:35 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு காலகம் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.  இன்பத்தமிழ் ஊரக வளா்ச்சி நடுவம் சாா்பில் ஒருங்கிணைப்பாளா்  ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடா் நா.வெங்கடேசன், மருத உதயகுமாா், இரா. மதியழகன், இரா. மாரிமுத்து, த. பழனிவேல், வன்மீகநாதன் ஆகியோா் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தரராஜனிடம்  ஒப்படைத்தனா்.

செறிவூட்டியை பெற்றுக் கொண்டு, மருத்துவ அலுவலா் பேசியது:  செல்வம் படைத்தவா்கள், நல் உள்ளம் கொண்டவா்களிடம் மருத்துவ வசதிக்காக தயங்காமல் கேட்டு பல நல்ல திட்டங்களை  செய்து வருகிறோம்.  அரசு திட்டங்களோடு ரூ. 50 லட்சத்துக்கும் மேல்  சமூக ஆா்வலா்களிடம் இருந்து பெற்று ஏழை மக்களுக்கு  சேவையாற்றியிருக்கிறோம். 

பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளா்களும் சோ்ந்தால்தான் பொது சுகாதாரத்தை தொடா்ந்து காப்பாற்ற முடியும்; பாதுகாக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.