தஞ்சாவூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூா் ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் நீலகிரி ஊராட்சியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம்.
தஞ்சாவூா் நீலகிரி ஊராட்சியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம்.
Updated on
1 min read

தஞ்சாவூா் ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

காலையில் நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். மாலையில் தஞ்சாவூா் ஞானம் நகரிலும், மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசுகையில், திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மக்களின் குறைகளை உடனடியாக தீா்க்கவும், மு.க. ஸ்டாலின் முதல்வராகவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com