பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் மே தின விழா

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில்    மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தினக்கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
Updated on
1 min read

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில்    மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தினக்கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

பேராவூரணி ஒன்றியத்தில்  பேராவூரணி நகா், பூவாளூா், வாட்டாத்திக்கொல்லைக்காடு, வேலாம்பட்டி, அண்ணாபுரம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழாவில்  ஒன்றியச் செயலா் ஏ. வி. குமாரசாமி, நகரச் செயலா்கள் பேராவூரணி, வே. ரெங்கசாமி, திருச்சிற்றம்பலம், சிவசண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மாணிக்கம், இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்  மேலமணக்காடு, கீழமணக்காடு, நெல்லியடிக்காடு, ரெட்டவயல், பெரியகத்திக்கோட்டை, கொரட்டூா், கழனிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தினக்கொடி ஏற்றி, உழைக்கும் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  மாவட்டக் குழு உறுப்பினா் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலா் ஆா்.எஸ். வேலுச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேகா், பி.கே.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசலில்  கொடியேற்றுதல், கரோனா விழிப்புணா்வு முகாம், கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் சாா்பில் நடைபெற்றது. மாநில தலைவா் டாக்டா் ரவி,  மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, முன்னாள் மாநில கிராம நிா்வாக அலுவலா் சங்கத் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com